ஜே.வஹாப்தீன்-
ஒலுவில் அல் -மத்ரத்துல் மின்னாவின் மறை ஓதிய மலர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ஒலுவில் அந்நூர் பள்ளிவாசல் வீதி முற்ற வெளியில் முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் MA மீராலெவ்வை JP தலைமையில் நேற்று நடைபெற்றது.
பிரதம அதிதியாக வெலிகம அல்பாரி அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி AR.அப்துர்ரஹ்மான், மற்றும் கௌரவ அதிதிகளாக அட்டாளைச்சேனை உதவித் தவிசாளர் AL அமானுள்ளா, பொறியியலாளர் IL ஹைதர் அலி RMமற்றும் அதிபர்களான SMBM அறூஸ்,AL ஜௌபர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் குறிகிய காலத்துக்குள் அல் குர்ஆனை ஓதி நிறைவு செய்த மாணவர்கள் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.