துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முதியவர் கைது!

துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

நேற்று (24) கருவலகஸ்வெவ வாவி - 8ஆம் கட்டைப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

இதில் காயமடைந்த நபர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும் இது குறித்து சந்தேகத்தின் பேரில் 65 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதோடு, அது தவறியதால் துப்பாக்கியால் தாக்கியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

எது எவ்வாறு இருப்பினும் சம்பவத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. 

கருவலகஸ்வெவ பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.(ந-த்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -