தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் வைத்தியரைப் போன்று நுழைந்த ஒருவர் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இவரிடம் இருந்து வைத்தியருக்கான போலி அடையாள அட்டை மற்றும் வைத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
எனினும் இவர் இவ்வாறு வந்ததற்கான நோக்கம் தெரியவரவில்லை.
சந்தேகநபர் சாதாரண ஆடையுடன் அறுவை சிகிச்சை அறைக்குள் செல்ல முற்பட்ட போது அருகிருந்த வைத்தியருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து அவர் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும் சந்தேகநபர் மெதிகிரிய பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
