பாணந்துரை மாநகர சபையில் இன்று காலை இடம்பெற்ற கூட்டத்தின் போது உறுப்பினர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் காயமடைந்த உறுப்பினர் ஒருவரும் நிர்வாக அதிகாரிகள் இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த நிர்வாக அதிகாரிகள் பொலிஸ் பாதுகாப்பில் பாணந்துரை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
காயமடைந்த உறுப்பினர் பொலிஸ் பாதுகாப்பில் நாகொட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
மாநகர செயலாளர் ஒருவரை பதவி நீக்கம் செய்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
