12ம் திகதி நாட்டில் தேசிய துக்க தினம்!

ஸ்கிரிய மகாநாயக்க பீட உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரின் இறுதி கிரியை இடம்பெறும் 12ம் திகதியை உள்நாட்டலுவல்கள் அமைச்சு தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளது. 

இறுதி கிரியை ஏற்பாட்டு குழுவை சந்தித்த உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி.ஏ.எஸ்.எச்.பொரலஸ்ஸ இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். 

அன்றைய தினம் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தேசிய கொடியை அரைகம்பத்தில் பறக்கவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சிங்கப்பூர் எலிசபத் வைத்தியசாலையில் இருந்து தேரரின் உடல் அந்நாட்டு விமான நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளதாகவும் இன்று இரவு 9 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய முடியும் என்றும் சிங்கப்பூர் சென்றுள்ள நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அத தெரணவிடம் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -