இக்பால் அலி-
கண்டி தெல்தெனிய சிவன் வலது குறைந்தோர் நிலையத்தின் ஏற்பாட்டில் விசேட தேவையுடைய சிறார்களுக்கான சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா கண்டி கெங்கல்ல பொது மைதானத்தில் நேற்று 25-04-2015 நடைபெற்றது.
முதற் தடவையாக வடக்குத் தெற்கை ஒன்றிணைக்கும் வகையில் மூவினங்களைச் சேர்ந்த விசேட தேவையுடைய சிங்கள, தமிழ், முஸ்லிம் சிறார்களும் அவர்களுடைய பெற்றோர்களும் ஒற்றுமையுடன் பங்கேற்ற விழா மிகச் சிறப்புடன் நடைபெற்றது.
சிவன் வலது குறைந்தோர் நிலையத்தின் தலைவர் கணேஷ் வேலாயுதத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணம். புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி, பன்விலை, மாத்தளை, நுவரெலியா, கேகாலை ஆகிய வலது குறைந்தோர் நிலையங்களிலிருந்து வருகை தந்த சிறார்களும், அவர்களுடைய பெற்றோர்கள் போட்டிகளில் பங்கு கொண்டதையும் சிவன் வலது குறைந்த நிலையத்தின் தலைவர் கணேஷ் வேலாயுதம் மற்றும் மாரஸ்ஸன விஹாராதிபதி ஆகியோர் போட்டியில் பங்கு கொண்டவர்களுக்கு பரிசில்கள் வழங்குவதையும் படங்களில் காணலாம்.(ந)