உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ள வறிய மாணவர்களை ஊக்குவிக்கும் விசேட திட்டம்!

ஏ.எம் றிகாஸ்-

ல்விப் பொதுத் தராதர உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ள வறிய மாணவர்களை ஊக்குவிக்கும் விசேட திட்டமொன்று அல்- றிலா இளைஞர் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த 80 மணவர்களுக்கு கடந்தகால வினா விடைப் பத்திரங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பான நிகழ்வு கழகத்தின் தலைவர் வீ.ரீ. கபூர் தலைமையில் ஏறாவூர்-றகுமானியா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கடந்த 4 வருடங்களுக்கான வினா விடை தொகுப்பு நூல் வடிவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர் நகர சபையின் முதல்வர் எம்.ஐ. தஸ்லிம் கலந்து கொண்டார். சிறப்பு அதிதிகளாக நகர சபை உறுப்பினர் ஏ.ஆர். பிரவுஸ் மற்றும் மாவட்ட இளைஞர் சேவைகள் உதவிப் பணிப்பாளர் முஹம்மட் நைறூஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -