முதலாம் தரத்திற்கான மாணவர் அனுமதி முறைமையில் மாற்றம்!

நாட­ளா­விய ரீதியில் உள்ள அர­சாங்கப் பாட­சா­லை­களில் தரம் ஒன்­றுக்­கான மாணவர் அனு­மதி முறையில் மாற்றம் கொண்டு வரப்­பட உள்­ள­தாக கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

கல்வி அமைச்­சினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்கை ஒன்­றி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

நாட­ளா­விய ரீதியில் உள்ள அர­சாங்கப் பாட­சா­லை­களில் தரம் ஒன்­றுக்­கான மாணவர் அனு­மதி தொடர்பில் தற்­போது அமுலில் உள்ள நடை­மு­றை­களில் பாரி­ய­ளவில் மாற்­றங்கள் செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

அந்­த­வ­கையில் பாட­சா­லையை அண்­மித்த பகு­தி­களில் வதி­வோ­ருக்கு விசேட வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்திக் கொடுக்கும் வகையில் புள்ளி வழங்கும் நட­வ­டிக்­கை­களில் மாற்றம் செய்­யப்­பட உள்­ள­தோடு இதற்கு மேல­தி­க­மாக தற்­போது நடை­மு­றையில் உள்ள புள்ளி வழங்கும் முறை­மையில் மாற்றம் செய்­யப்­பட உள்­ளது.

தரம் ஒன்­றுக்­கான மாணவர் அனு­மதி தொடர்­பி­லான விண்­ணப்­பங்கள் ஜூன் மாதம் கோரப்­ப­டு­கின்ற போதிலும், புதிய முறை­மையின் கீழ் மே மாதமே விண்­ணப்­பிக்க வேண்­டு­மெனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அத­ன­டிப்­ப­டையில் இவற்­றுக்­கான விண்­ணப்­பங்கள் பரி­சீ­லனை, நேர்­முகத் தேர்வு, மேன்­மு­றை­யீடு, பெயர் பட்­டியல் வெளி­யீடு போன்ற அனைத்து நட­வ­டிக்­கை­களும் அதே ஆண்­டில் மேற்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

முதலாம் தவணையிலேயே சகல மாணவர்களையும் தரம் ஒன்றில் இணைத்துக் கொள்ளும் நோக்கில் இந்த மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக கல்வி அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -