கண்டி மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களை பதிவு செய்வது தொடர்பான விழிப்பூட்டும் செயலமர்வு!

இக்பால் அலி-
முஸ்லிம் சமய காலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சின் அனுசரணையுடன் கண்டி மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் ஏற்பாட்டில் கண்டி மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களை பதிவு செய்வது தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயலமர்வு கண்டி கட்டுக்கலை ஜும்ஆப் பள்ளிவாசலில் கண்டி மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எச். உமர்தீன் தலைமையில் 23-03-2015இல்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட  முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ ஹலீம்  மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபீஹ் ஹாஜியார், முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் எம். எச். எச். சமீல் உள்ளிட்டவர்கள் உரையாற்றுவதையும் பள்ளிவாசலின் பதிவேட்டில் அமைச்சர் கையொப்பமிடுவதையும் அருகில் கண்டி கட்டுக்கலை ஜும்ஆப் பள்ளிவாசலின் செலாளரும் கண்டி நகர் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவருமான அல்ஹாஜ் கே. ஆர். ஏ. சித்தீக் ஆகியோர் அருகில் நிற்பதையும் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம். 





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -