நீர் தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்றில் விழிப்புணர்வுக் கூட்டம்!

அஹமட்-
நீர் எமது உயிர். எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற விழிப்புணர்வுக் கூட்டம் அக்கரைப்பற்று திட்ட முகாமையாளர் காரியாலய மண்டபத்தில் திங்கட்கிழமை (30) இடம்பெற்றது.

உலக நீர் தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று நீர்ப்பாசன திட்ட முகாமையாளர் காரியாலயத்தின் ஏற்பாட்டில், அக்கரைப்பற்று நீர்ப்பாசன வதிவிட திட்ட முகாமையாளர் எம்.எம்.நழீம் தலைமையில் இந்நிகழ்வு இடம் பெற்றது.

இந்நிகழ்வில், அம்பாறை நீர்ப்பாசன திணைக்கள நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.நவாஸ், வளவாளராக கலந்து கொண்டு நீரின் முக்கியத்துவம் பற்றி விளக்கமளித்தார்.

இந்நிகழ்வில் வதிவிட திட்ட முகாமையாளர் காரியாலய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.பாயிஸ் உட்பட 50க்கு மேற்பட்ட விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -