அரசியல் வியாபாரிகள் ஊடகத்துறைக்கு பொருத்தமற்றவர்கள் CCD அமைப்பு தெரிவிப்பு !

ஏக்கூப் பைஸல்-
டகங்கள் அரசியல்வாதிகளை தலைமையாக வைத்து சமூகத்தை விழிப்புட்டும் நிகழ்ச்சிகளை நடாத்துவது இனங்களுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்தும் என சமூக அபிவிருத்திக்கான மக்கள் இயக்கம் தெரிவிக்கின்றது. 

இனங்களுக்கிடையில் ஒற்றுமையினையும் புரிந்துணர்வுகளையும் ஏற்படுத்தும் நோக்கில் கருத்துகளை வழங்க வேண்டிய ஊடகவியளார்கள் அரசியல் தலைவர்களை மோதவிட்டு பிளவுகளை ஏற்படுத்தும் நிலையினை அண்மையக் காலங்களில் சில ஊடகங்கள் செய்து வருகின்றன. 

ஊடகம் என்பது மாற்றத்தினை ஏற்படுத்தும் ஒரு ஆயுதம் அந்த ஆயுதத்தினைப் பயன்படுத்தும் ஊடகவியளார்கள் பல் காலசார நாட்டில் தங்களது கருத்துக்களை வெளியிடுகின்ற போது ஒரு இனத்தினை தாக்குவதாக அமையக் கூடாது . 

அரசியல் வியாபாரிகள் ஊடகத்தில் இருந்தால் தங்களது கருத்துக்களை மக்களிடம் முன்வைக்க முனைவர்கள் அந்த முன்வைப்பு இரு இனத்தை அல்லது ஒரு கட்சியை தாக்குவதாக அமையும் எனவே அரசியல்வாதிகளை ஊடகங்கள் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கவேண்டும் ஆனால் நிகழ்சிகளை நடாத்துவதற்கு அழைக்கக் கூடாது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -