பழுலுல்லாஹ் பர்ஹான்-
மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் 2014 வருடாந்த ஒன்று கூடல் 28-02-2015 இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு கிரான்குளம் சீ மூன் காடன் ஹோட்டலில் இடம்பெற்றது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளரும், மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் தலைவருமான பொறியியலாளர் வை.தர்மரட்ணம் தலைமையில் இடம்பெற்ற இவ் ஒன்று கூடலில்; வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் ரீ.பத்மராஜா,சிரேஷ்ட பொறியியலாளர் ஜெயபாலினி தர்மரட்ணம் , மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்களான உதயசங்கர் ஏ.லிங்கேஸ்வரன்,எம்.சதாத் மட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகார சபையின் சிரேஷ்ட கணக்காளர் சுஹைர், மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் செயலாளர் சிவநேஸ்வரன் ,அதன் பொருளாளர் பிர்தௌஸ் உட்பட ஊழியர் நலன்புரி சங்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது ஊழியர் நலன்புரி சங்கத்தின் உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஒன்று கூடல் வருடா வருடம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.