என்றார் அவர்
'நீ என்னும் நான்'
என்றார் இவர்
'நான் நீயாக முடியுமா?'
என்றார் அவர்
'நீ யாக நான் ஆவேன்'
என்றார் இவர்
'நான் நானே தான்'
என்றார் அவர்
'நீ நானும் தான்'
என்றார் இவர்
'நான்' ஆகி 'நீ' ஆகி
'நாமாவோம்'
என்றார் அவர்
'நாம் ஆகி நலதாகி
நலமாவோம்'
என்றார் இவர்
'நமதாகி வளமாகி
களமாவோம்'
என்றார் அவர்
'களமாகி குலமாகி
பலமாவோம்'
என்றார் இவர்
'பலமாகி பணியாகி
கனியாவோம்'
என்றார் அவர்
'கனியாகி கருவாகி
மரமாவோம்'
என்றார் இவர்
'மரமாகி நிழலாகி
மனையாவோம்'
என்றார் அவர்
'மனையாகி துணையாகி
இணையாவோம்'
என்றார் இவர்
'இணையாகி அணையாகி
இருவரும் ஒருவராகி
பிணையாவோம்'
என்றார் அவர்
பிணையானார் முனையானார்
பிடிப்பானார் துடிப்பானார்
படிப்பானார் அப் பெரியார்கள்
அஷரப்,ஹக்கீம் பெயர் வாழி
அவரிருவர் குறி வளர்க நீழி!
கவிஞர் கலாபூஷனம் ஆசுகவி அன்புடீன்-
