இறக்காம மக்களின் குறை நிறைகளை கேட்டறிந்தார் - அமைச்சர் றிசாத் பதியுதீன்!

எஸ்.எம். சன்சீர்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் முனாஸ் அவர்களின் அழைப்பின் பெயரில் நேற்று (2015.02.01) பிற் பகல் 3.00 மணியளவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமமைச்சருமான றிசாத் பதியுதீன், பிரதி அமைச்சர் எஸ்.எம்.அமீர் அலி ஓட்டமாவடி நகர முதல்வர் வை.எல்.எஸ். ஹமீட் ஆகியோர் வருகைதந்தனர். 

இதன் போது இறக்காமம் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு சென்று பள்ளிவாயல் தலைவர் உட்பட நம்பிக்கயாளர்களுடனும் மற்றும் அங்கு குளுமியிருந்த பொது மக்களுடனும் உரையாடி, பள்ளியின் நிர்மானப்பணிக்கு உதவி செய்வதாக கூறி அங்கிருந்து புறப்பட்டார்.

 மேலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் முனாஸ் அவர்களின் இல்லத்தின் முன்றலில் பொது மக்களை சந்தித்து உரையாடி அவர்களின் குறை நிறைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை எதிர்காலத்தில் தீர்வு காண்பதாகவும் இப்பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வளர்ச்சிக்கு பாடுபடுமாறும் வேண்டிக் கொண்டார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -