கல்முனை நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளராக நிஸாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார்!

அஸ்லம் எஸ்.மௌலானா-
ல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நகர அபிவிருத்தி நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான றவூப் ஹக்கீமினால் இந்நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கான புதிய தவிசாளர் மற்றும் பணிப்பாளர்கள் அமைச்சர் ஹக்கீமினால் இன்று நியமனம் செய்யப்பட்டனர். இதன்போதே சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பருக்கு மேற்படி பதவிக்கான நியமனம் கடிதம் அமைச்சரினால் கையளிக்கப்பட்டது.

நகர அபிவிருத்தி நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சில் இன்று திங்கட்கிழமை காலை இந்நிகழ்வு இடம்பெற்றது. 

இந்நியமனத்தின் பிரகாரம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் சார்பில் நாட்டிலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் பொறுப்பான பணிப்பாளராக இவர் செயற்படுவார் என அறிவிக்கப்படுகிறது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -