தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் வே.மகேந்திரன் காலமானார்!

மிழ்தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட திருக்கோவில் பிரதேச சபையின்; உறுப்பினரும் வைத்தியருமான (61) வயதுடைய வே. மகேந்திரன் சுகயீனமமுற்ற நிலையில் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த இருதினங்களாக சுகயீனமுற்ற நிலையில் அம்பாறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் உயிரிழந்துள்ளார். 

தம்பிலுவை பிறப்பிடமாக கொண்ட இவர் வைத்தியராக பல வைத்தியசாலைகளில் கடமையாற்றிவந்துள்ளதுடன் தமிழ் தேசியத்தின் பால் ஈர்க்கப்பட்டு கடந்த பிரதேச சபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்ப்பில் தேர்தலில் போட்டியிட்டு பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

இவரின் ஈமைக்கிரிகைகள் வெள்ளிக்கிழமை நடைபெ;று தம்பிலுவில் இந்து மயானத்தில் தகனக்கிரிகைகள் இடம்பெறும் என உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -