ஓட்டமாவடி மாஞ்சோலை பதூரியா கிராம சேகவர் பிரிவைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்!

ந.குகதர்சன்-
ட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் மாஞ்சோலை பதூரியா கிராம சேவகர் பிரிவில் கடமை புரிந்த கிராம சேவகரை இடமாற்றிய சம்பவம் தொடர்பாக மாஞ்சோலை பதூரியா கிராம சேகவர் பிரிவைச் சேர்ந்த மக்கள் திங்கட்கிழமை பிரதேச செயலக முன்னாள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாஞ்சோலை பதூரியா கிராம சேகவராக கடமையாற்றிய யூ.எல்.எம்.நஜீப் என்பவரை அப்பகுதியிலுள்ள பிரதேச அரசியல்வாதியின் ஒத்துழைப்புடன் கடந்த 2015.01.27ம் திகதி இடமாற்றிய போதும் மக்கள் மாவட்ட செயலாளரிடம் கொடுத்த வேண்டுகோளுக்கிணங்க உதவி மாவட்ட செயலாளரினால் 2015.02.05ம் திகதி ஒப்பமிட்டு குறித்த இடமாற்றத்தை இரத்து செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் குறித்த கிராம சேகவரை மாஞ்சோலை பதூரியா கிராமத்தில் கடமைகளை பொறுப்பேற்க அனுமதிக்கவில்லையென்று கோரியே பிரதேச செயலகத்திற்கு முன்னாள் நியாயம் கேட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திங்கட்கிழமை திருகோணமலையில் இடம்பெறும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதேச செயலாளர் சென்றுள்ளதால் இதற்கான தீர்வை தன்னாள் வழங்க முடியாதென்றும், எதிர்வரும் புதன்கிழமை பிரதேச செயலகத்திற்கு வந்து பிரதேச செயலாளரைச் சந்தித்து உரையாடுமாறும், அன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு சென்று மாவட்ட செயலாளரை சந்திக்குமாறும் ஓட்டமாவடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா தெரிவித்தார்.

அதனையடுத்து ஆர்ப்பாட்டக் காரர்கள் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -