பாடசாலை மாணவர்களின் உணவு வழங்குவது தொடர்பில் விசேட கவனம்!

னைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கிறது .

அதற்கான நடவடிக்கைகள் தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார். 

100க்கும் குறைந்த மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலைகளில் மாத்திரமே தற்போது மதிய உணவு வழங்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார் .

பாடசாலைக் கல்வியைத் தொடரும் அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவை வழங்கும் திட்டத்தை கட்டங்களாக முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பாடசாலைகளில் மதிய உணவு வழங்கும் நடவடிக்கையில் தற்போது பல்வேறு குளறுபடிகள் காணப்படுவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அக்கில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமைச்சர் அவர்களினால் பாடசாலை மாணவர்களின் நலன்கருதி பாடசாலை மாணவர்களுக்கு இலவசப்புத்தகங்களும் அப்பியாசக்கொப்பிகளையும் வழங்க தீர்மாணித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -