நான் அரசியலுக்கு வரமாட்டேன் என திஸ்ஸ அத்தநாயக்கவின் மகள் துல்மினி அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
முகப்புத்தக வளைத்தளங்களில் தனக்கு கிடைக்கப்பட்டுள்ள புகழ் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நான் அரசியலுக்கு வர தீர்மானிக்கவில்லை. அப்படியான ஒரு அவசியமும் எனக்கு இல்லை. ஆனாலும் நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அதற்காக நான் அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை.
சமூக அமைப்பொன்றை அமைத்துக்கொண்டு சேவை செய்யவும் முடியும். என்னிடம் எல்லோரும் கேட்கிறார்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று ஆனால் எனக்கு அரசியலில் விருப்பம் இல்லை எனது அப்பாவுக்கும் அதில் உடன்பாடு இல்லை என துல்மினி அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
