இலங்கை விமானப் படையின் மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு அமைச்சர் அர்ஜூண ரணதுங்க விஜயம்!

பழுலுல்லாஹ் பர்ஹான்-

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூண ரணதுங்க 14 இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பிலுள்ள இலங்கை விமானப் படையின் உள்ளுர் விமான நிலையத்திற்கு விஜயம் செய்தார்.

அங்கு விஜயம் செய்த அமைச்சர் மட்டக்களப்பு விமான நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரயாணிகள் இளைப்பாரும்; மண்டபத்தையும், விஸ்தரிக்கப்பட்டு வருகின்ற விமான ஓடுபாதையையும் பார்வையிட்டார்;.

இதன் போது மட்டக்களப்பு விமான நிலையத்தின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பிலும் அதன் செயற்பாடுகள் பற்றியும் அமைச்சர் அர்ஜூண ரணதுங்க மட்டக்களப்பு விமானப் படை இணைப்பதிகாரி அதுல களு ஆராச்சியிடம் கேட்டறிந்து கொண்டார்.

இவ் விஜயத்தில் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி டக்டாஸ் பனாகொட மற்றும் துறைமுகங்கள் விமான சேவைகள் அமைச்சின் அதிகாரிகள் உட்பட மட்டக்களப்பு விமானப் படை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -