எம்.ஏ. தாஜகான்-
மொனராகலை மாவட்டம் மெதகம பிரதேசத்தில் இயங்கி வரும் மக்தபு தாரில் குர்ஆனில் ஹகீம் மத்ரசாவின் 3 வது மாணவர் விடுகை விழாவும், பரிசளிப்பு விழாவும் இன்று(1) மத்ரசாவின் முன்றலில் நடை பெற்றது.
மத்ரசாவின் நிர்வாக சபைத் தலைவர் நசார்தீன் ஹாஜியாரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கண்டி கட்டுக்கல புர்க்கானியா அரபுக்கல்லூரியின் விரிவுரையாளர் மௌலவி அல்ஹாபிழ் எம்.டி.எம்.இக்ராம்(தீனி), சிறப்பதிதியாக அக்குரன பைத்துஸ் ஸகாத் நிதியத் தலைவர் மௌலவி முசம்மில் அஹ்மத்(மழாகிரி) மற்றும் மொனராகலை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் மௌலவி அல்ஹாஜ் எம்.எஸ்.எம். சன்சபீல்(ஸர்க்கி) அவர்களும் கலந்து மார்க்க சொற் பொழிவு நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்வில் எட்டு மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறினர். 50 மாணவர்வர்களுக்கான சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கியமை குறிப்பிடத்தகது.
.jpg)
