அக்கரைப்பற்றில் NFGGயின் கூட்டத்தில் குழப்பம் விளைவித்தாக கூறுவது வெறும் கட்டுக்கதையாகும்!

அப்சார்-
க்கரைப்பற்றில் நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியின் கூட்டத்தில் குழப்பம் விளைவித்தாக கூறுவது வெறும் கட்டுக்கதையாகும். 

நாம் அறிந்த வரையில் அக்கரைப்பற்றில் நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியின் கூட்டத்தில் எந்த வித குழப்பங்களும் நடக்கவில்லை. 

சாய்ந்தமருதில் நடந்த சம்பவத்தை திருவுபடுத்தி அக்கரைப்பற்றிலும் குழப்பம் நடந்தாக கூறுவது அரசியல் விளம்பரத்துக்காகவே என்பது தெளிவாக தெரிகிறது. 

மேலும் நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியின் அக்கரைப்பற்று அமைப்பாளர் சிறாஜ் அவர்கள் இது தொடர்பாக தெளிவு படுத்த வேண்டும்.

மேலும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், ஜமாஆத்தே இஸ்லாமி, தாறுல் அர்க்கம் மற்றும் புத்தளம் மன்னார் அக்குறனை போன்ற பகுதிகளில் இயங்கும் இஸ்லாமிய அமைப்புகள் போன்றவற்றுக்கும் நல்லாட்சிக்கான மக்கள் முன்னணிக்கும் என்ன தொடர்பு? இவை எல்லாம் ஒரு அமைப்பா? 

இல்லை வேறு வேறா என்பது இன்று மக்கள் மத்தியில் நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி தெடர்பாக காணப்படும் பலத்த சந்தேகமாக இருக்கிறது இது தொடர்பாகவும் அவ்வமைப்பின் தலைவர் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.நீங்கள் எல்லாம் ஒரே அமைப்பாக இருந்தால் இந்த போலி முக மூடிகளை கிழித்தெறிந்துவிட்டு நேரடியாகவே அரசியலில் இறங்கலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -