ஆப்பிள் நிறுவனம் உலக சாதனை!

ஸ்மார்ட்ஃபோன்கள் உள்ளிட்ட மின்னணு சாதன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஆப்பிள் நிறுவனம், கடந்த காலாண்டில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டி உலக சாதனை படைத்துள்ளது.

வணிக நிறுவனம் ஒன்று இந்த அளவு பெரிய லாபத்தொகையை பதிவு செய்துள்ளது உலகளவில் இதுவே முதல் முறை என்று ஹோவர்டு சில்வர்பிளாட் என்ற மதிப்பீட்டு நிறுவனம் கூறியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்திடம் தற்போதுள்ள 11 லட்சம் கோடி ரூபாயைக் கொண்டு ஐபிஎம் நிறுவனத்தை விலைக்கு வாங்கி விட முடியும் அல்லது ஒவ்வொரு அமெரிக்க குடிமகனுக்கும் தலா 35 ஆயிரம் ரூபாயை வழங்க முடியும் என அந்த மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த பண்டிகை சீசனில் ஆப்பிள் ஃபோன்கள் விற்பனை எதிர்பார்த்ததை விட அதிகளவில் விற்பனையானதும், குறிப்பாக சீனாவில் விற்பனை அதிகரித்ததுமே மிகப்பெரும் லாபத்துக்கு காரணமாக அமைந்தது என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இதுதான் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு பொது நிறுவனம் ஈட்டியிருக்கும் மிகப்பெரிய லாபத்தொகையாகும். இதற்கு முன்பு எக்ஸோன்மொபில் மற்றும் கேஸ்ப்ரோம் போன்ற எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் முந்தைய சாதனைகளை இது முறியடித்திருக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -