உலமாக்கள் ,கதீப்மார்களுக்கான இரண்டு நாள் தலைமைத்துவப் பயிற்சிக் கருத்தரங்கு!

பழுலுல்லாஹ் பர்ஹான்-

வூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், வக்பு,அழைப்பு மற்றும் வழிகாட்டலுக்கான அமைச்சும் ,காத்தான்குடியில் இயங்கும் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியும் இணைந்து உலமாக்கள் ,கதீப்மார்களுக்கான இரண்டு நாள் தலைமைத்துவப் பயிற்சிக் கருத்தரங்கொன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் தலைவரும்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இக் கருத்தரங்கு தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்;

இலங்கையின் நாலா புறங்களிலிருந்தும் சுமார் 500 உலமாக்கள் கலந்து கொள்ளும் இக் கருத்தரங்கின் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை மறுதினம் 31-01-2015 சனிக்கிழமை காலை 8.45 மணி தொடக்கம் காலை 10.15 மணி வரை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திலும் இறுதி வைபவம் 01-02-2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.மணி தொடக்கம் மாலை 6.மணி வரை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திலும் நடைபெறுமென அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -