கத்தாரில் வாகனம் ஓட்டுகின்ற சகோதரர்களுக்கான ஓர் முக்கிய செய்தி. கத்தார் நாட்டின் புதிய போக்கு வரத்து சட்டத்தின் படி, வலது பக்கமாக முந்திச்செல்பவர்கள் மற்றும் முன்னால் உள்ள வாகனத்திற்கு உரிய இடைவெளி விட்டு நிறுத்தாத பட்சத்தில் பின்வருமாறு தண்டனைக்கு உள்ளாக்கப் படுவார்கள்.
முதல் குற்றமானால் 500 ரியால் அபராதமும் + 7 நாட்களுக்கு வாகனம் பறிமுதல். (அந்த 7 நாட்களுக்கும் 1 நாளுக்கு 15 ரியால் விகிதம்அபராதம்).
2வது குற்றமானால் 7 நாள் வாகனம் பறிமுதல் + ஓட்டுனருக்கு 7 நாள் சிறை.
3வது குற்றமானால் மேற் குறிப்பிட்ட தண்டனையுடன் ஓட்டுனர் உரிமம் ரத்து.
ஆகவே அவசரமில்லாமல், ஆறுதலாகவும், நிதானமாகவும் வாகனங்களை செலுத்துங்கள். அதுவே உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்க்கும் நல்லது. ஆபத்து இல்லாமலும் அபராதம் விதிக்காமலும் வாகனத்தை ஓட்டவும்.