போக்குவரத்து பிரதி அமைச்சர் தௌபீக்கும் முன்னால் அமைச்சர் மன்சூரும் சந்திப்பு!

லங்கை போக்குவரத்து சபை, சம்மாந்துறை டிப்போவில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திக்கும் நோக்கில் உள்நாட்டு போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் அவர்களை முன்னால் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் இன்று சந்தித்துள்ளார்.

நாரஹன்பிட்டியிலுள்ள அமைச்சரின் காரியாலத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் அடங்கிய மகஜரை கையளித்துள்ளார்.

இதுவரை உப டிப்போவாக இயங்கிவரும் இதனை தனியான டிப்போவாக தரம் உயர்த்துவதுடன் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிரந்தர காரியால கட்டடத்தை முடிவுருத்துவதட்கு தேவைப்படும் 6மில்லியன் ரூபாவை ஒதிக்கி தருமாறும் கோரியுள்ளதுடன் மேலதிகமா தேவைப்படும் பஸ்களையும் தந்துதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் அவர்கள் முன்னால் அமைச்சரின் இந்த கோரிக்கைகள் அனைத்தையும் மிக விரைவில் நிவர்த்தி செய்வதாக வாகளித்துள்ளதாக தெரிய வருகிறது.

இதன் மூலம் சம்மாந்துறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை் நிபர்த்தி செய்யப்பட இருப்பது முக்கிய அம்சமாகும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -