எம்.ஏ. தாஜகான்
பொத்துவில் குண்டுமடு பகுதியில் வைத்து நேற்று செல்வநாயகம் விதுஸா(11 வயது) சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இது பற்றி தெரியவருவதாவது, வெலிகந்த கதிரவெளி பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி தனது அம்மாவுடன் பொத்துவிலில் வசித்து வரும் தனது அக்காவை பார்ப்பதற்காக பொத்துவிலுக்கு வருகை தந்து கடந்த ஒரு வாரகாலமாக அக்காவின் வீட்டில் தங்கியுள்ளார். இச் சந்தர்ப்பத்தில் சிறுமியின் அக்காவின் கணவனான குமாரசாமி சிவானந்த ராஜா என்பவரால் கடந்த ஒரு வாரகாலமாக பாலியல் தொந்தரவுக்குள் உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இதனை குறித்த சிறுமி அம்மாவிடம் எத்தி வைத்த பொழுது அம்மாவின் மூலமாக பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து குற்றவாளி பொத்துவில் நீதி மன்றில் இன்று 30.01.2015 ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையினை பெறுவதற்காக வேண்டி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி மேலதிக பரிசோதனைக்காக வேண்டி மொனராகலை வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
