அட்டாளைச்சேனையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கான வரவேற்பும், கட்சிக்காரியாலய திறப்பு விழாவும்!

அ.றஹ்மான்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் மாண்புமிகு நகர அபிவிருத்தி,நீர்வழங்கள் மற்றும் வடிக்காலமைப்பு சபை அமைச்சர் அல்ஹாஜ் ரஊப் ஹக்கீம் அவர்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் மான்புமிகு சுகாதார இராஜாங்க அமைச்சருமான அல்ஹாஜ் எம்.ரி.ஹஸன் அலி அவர்களையும் அம்பாரை மாவட்ட முஸ்லிம் சமூகம் மனமுவர்ந்து வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (2015.01.31)ஆம் திகதி பிற்பகல் 2.00 மணியளவில் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்குற்பட்ட பிரதேசங்களில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வின் போது அட்டாளைச்சேனை,பாலமுனை ஒலுவில் கிராமங்கள் ஊடாக வாகனப் பவனியாக வலம் வருதலும் அட்டாளைச்சேனை கோணாவத்தை ஓ.பி.ஏ வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோணாவத்தை காரியாலத்தை திறந்து வைக்கும் நிகழ்வும்,பாலமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் மாவட்டக்காரியாலத்தையும் திறந்துவைக்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளும் இக்குதூகல விழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அனைத்து போராளிகளையும் இன்முகத்தோடு அழைக்கின்றோம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -