களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் கல்வி எழுச்சி வாரம – 2015

ளுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் கல்வி எழுச்சி வாரம் 2015' மாணவர்களின் கற்றல் திறமையை மேம்படுத்தம் நோக்கத்தில் பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் Rise & Shine அமைப்பு எதிர்வரும் 28ம் திகதி தொடக்கம் ஒரு வார காலத்துக்கு கல்வி எழுச்சி வாரம் ஒன்றை அனுஷ்டிக்கவுள்ளது. 

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் திட்டமிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி திட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமுகநல அமைப்பை சேர்ந்தவர்கள் என பலதரப்பட்ட தரப்பினருக்கம் வௌ;வேறு நிபுணத்துவம் பெற்ற வளவாளர்கள் செயலமர்வுகளை நடாத்தவுள்ளனர். 

இத்திட்டத்தின் ஓர் அங்கமாக எதிர்வரும் பெப்ரவரி 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி தொடக்கம் கல்லூரியிலிருந்து களுத்துறை பிரதேசத்தின் 'கல்வி எழுச்சி நடைபவணி'' ஒன்றை பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதில் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் சகலரும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். மேற்படி நிகழ்வுகள் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபர் சிரேஷ்ட ஒளி, ஒலிபரப்பாளர் அல் - ஹாஜ் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி தலைமையில் இடம் பெறவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -