ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றின் போதே கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் திஸ்ஸ அத்தநாயக்க தன்னுடைய இராஜினாமாக் கடிதத்தைக் கையளித்துள்ளார்.
இதனிடையே, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ள திஸ்ஸ அத்தநாயக்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டார் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார், அவருக்கு சுகாதார அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 comments :
Post a Comment