ஜனாதிபதியின் காத்தான்குடி தேர்தல் மேடையை அமைப்பதற்காக நீலப் படை அணி



பழுலுல்லாஹ் பர்ஹான்-

திர்வரும் 19-12-2014 வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்தான்குடிக்கு விஜயம் செய்து காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள 2015 ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் உரையாற்றவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கமைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்தான்குடியில் ; கலந்து கொள்ளவுள்ள தேர்தல் மேடையை அமைப்பதற்காக நீலப் படை அணியினர் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

குறித்த தேர்தல் மேடை அமைப்பதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்தவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முகவரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 15-12-2014 நேற்று திங்கட்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்திற்கு விஜயம் செய்தார்.

இவ் விஜயத்தில்; தேர்தல் முகவரும்,தேசிய கடதாசி கம்பனியின் தலைவருமான மங்கள சீ செனரத், காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -