பழுலுல்லாஹ் பர்ஹான்-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் 17 வது திருத்த சட்டத்தை கொண்டு வந்தபோது ஜனாதிபதி மூன்றாவது முறையும் தேர்தலில் போட்டியிடுவதற்கான அங்கிகாரத்தை வழங்கியவர் ஸ்ரீ.ல.மு.கா கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 29-12-2014 நேற்று திங்கட்கிழமை காத்தான்குடியிலுள்ள ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு தொகுதி தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் தெரிவித்ததார்.