ஜனவரி 8ம் திகதி இரவு 11 மணிக்கு பின்னர், கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும்- மைத்திரி

னாதிபதி தேர்தல் நடக்கவுள்ள ஜனவரி 8ம் திகதி இரவு 11 மணிக்கு பின்னர், கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் எமது வெற்றி உறுதி ஆகிவிட்டது. 

இதன் காரணமாக மக்கள் பணத்தை கொள்ளையடித்த ராஜபக்ச ரெஜிமண்ட் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க முடியாது. மக்கள் பணத்துக்கு பதில் சொல்ல வேண்டியவர்களை இந்தியா போன்ற நாடுகள் காப்பாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது.

இலங்கைத் தீவில் மக்கள் முன்பாக இதற்கு பதில் சொல்லும் பொறுப்பு முன்னைய ராஜபக்ச ரெஜிமண்டுக்கு உள்ளது. தோல்வியின் நிலை அறிந்து தற்போது என்ன பேசுகின்றோம் என்று தெரியாமல் ஒவ்வொரு கூட்டத்திலும் தனது அரசியல் சலூனுக்கு ஒப்பானது என்று தரம் குறைத்து வருகின்றரர்.

இதனால்தான் ஒவ்வொரு அமைச்சர்களும் இன்று அரசை விட்டு வெளியேறுகின்றனர். 

இன்று ஒன்று மட்டும் சொல்ல விரும்புகின்றேன். அரசாங்கத்துக்கு உள்ளேயும் அரசாங்கத்துக்கு வெளியிலும் நடக்கும் சூழ்ச்சிகள் அறியாத ஜனாதிபதியாக இருக்கின்றமை பற்றி மக்கள் நன்கு அறிவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -