ஜனாதிபதி தேர்தலில் எதிரணி சார்பாக போட்டியிட உள்ள பொதுவேட்பாளர் தொடர்பான விபரங்கள் இன்று மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் அறிவிக்கப்படும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
எதிரணியினர் இன்று பிற்பகல் மூன்று மணியளவில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுடன் சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
அதன் பின்னர் மாலை 7 மணிக்கு எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக யார் களமிறங்குவார் என்பது தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்படும் என்றார்.

0 comments :
Post a Comment