பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலய மைதானத்தில் பார்வையாளர் அரங்கு அமைக்க நடவடிக்கை!

பி. முஹாஜிரீன்-

க்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலய மைதானத்தில் பார்வையாளர் அரங்கு அமைக்கப்படவுள்ள இடத்தினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.

இதில் அல் ஹிக்மா வித்தியாலய அதிபர் எம்.எச். அப்துல் றஹ்மான், பிரதி அதிபர் பி. முஹாஜிரீன், சின்னப்பாலமுனை ஜூம்ஆப் பள்ளிவாயல் தலைவர் ஏ. உதுமாலெவ்வை, பாலமுனை சுப்பர் ஓக்கிட் விளையாட்டுக் கழகத்தின் உப தலைவர் எஸ்.எச். தம்ஜீத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீரின் இவ் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து ரூபா 10 இலட்சம் அல் ஹிக்மா வித்தியாலய மைதானத்தில் பார்வையாளர் அரங்கு அமைப்பதற்கென ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :