5ம் தர புலமைப் பரிசில் வெற்றி பெற்ற மருதமுனைப் பிரதேச மாணவர்கள் 76 பேர் கௌரவிப்பு!

 பி.எம்.எம்.ஏ.காதர்-

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனைக் கிளையின் ஏற்பாட்டில் இவ்வாண்டு நடைபெற்ற 5ம் தர புலமைப் பரிசில் பரிட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மருதமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 76 மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்குமான பரிசளிப்பு விழா கடந்த வெள்ளிக்கிழமை (2014-11-28) மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் மருதமுனைக் கிளையின் தலைவர் எம்.ஐ.முகம்மட் பிராஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதம அதிதியாக கல்முனை வலயக்; கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதியாக ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தின் (ளுடுவுது)பொதுச் செயலாளர் ஆர்.அப்துர் றாஸிக் கலந்து கொண்டார்.

மேலும் விசேட அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.சி.எம்.தௌபீக், உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்சக்காப் ஆகியோரும், அதிதிகளாக அதிபர்களான எம்.எம்.ஹிர்பகான், எம்.ஏ.எம்.இனாமுல்லா, ஏ.ஆர்.நிஃமத்துல்லா, ஏ.முகம்மட் ஜிப்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஏ.ஆர்.எம்.இக்பால், எஸ்.எல்.பரிஸ், என்.எம்.அஷ்ரப், ஏ.பீ.எம்.நபீர், எம்.எச்.அஹமட் அஜ்மீர். எம்.எம்.மிஹ்றாஜ், எம்;.ஏ.எம்.எல்.காமாயூன், எஸ்.எல்.நஜிமுத்தீன் ஜே.எம்.ஜாபிர்,ஜேஸீம் ரேடர்ஸ் ஆகியோர் அனுசரணை வழங்கியதுடன் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுப் பொதிகளும் வழங்கப்படுவதுடன் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெறுமதியான பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன. ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் மருதமுனைக் கிளையின் செயலாளர் எம்.எச்.அஹமட் அஜ்மீர் விழாவை நெறிப்படுத்தினார்;. ஆசிரியர் எம்.ஐ.எம்.சுல்பி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :