பதவியை இராஜினாமா செய்து தியாகம் செய்தேன் -முன்னாள் எம்.பி அஸ்வர்

னாதிபதி யின் கரங்க ளைப்பலப்ப டுத்தவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை மேலும் வலுவுள்ளதாக்கவுமே தான் தனது பாராளுமன்றப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்து தியாம் மேற்கொண்டதாக முன்னாள் எம்.பி ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார்.

நான் எனது எம்.பி பதவியை கட்சிக்காக விட்டுக் கொடுத்தேனே தவிரவும் யாரும் என்னை வற்புறுத்தி இராஜினாமாச் செய்ய வைக்கவில்லை. அத்துடன் நான் கட்சி மீது வெறுப்படைந்தோ, பொதுபல சேனாவைக் கண்டோ இராஜினாமாச் செய்யவில்லை எனவும் அஸ்வர் அவர்கள் தெரிவித்தார்.

சிலர் தனது இராஜினாமாவை வைத்து தமது இஷ்டப்படி கதைகளைக் கட்டி வருவதாகத் தெரிவித்த அவர் இதுவே உண்மை எனவும் தெளிவுபடுத்தினார்.

இன்று இந்நாட்டில் முஸ்லிம் மக்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் வாழ வழிசமைத்தவர் ஜனாதிபதி மஹிந்தவே. இந்நாட்டு முஸ்லிம்களின் பாதுகாப்பை அவர் உறுதி செய்துள்ளார். வானொலியில் ஐவேளையும் பாட்டு ஒலிக்கிறது. சர்வதேசத்தில் முஸ்லிம் நாடுகள் சகலதுமே அவருக்குப் பக்கபலமாக இருக்கின்றன எனவும் அஸ்வர் அவர்கள் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :