ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராக அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பாவை நியமிக்க கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி ஜனாதிபதி பொதுவேட்பாளராக போட்டியிடவுள்ள நிலையில் இந்த புதிய நியமனம் வழங்கப்படுகிறது..
இந்தநிலையில் மைத்திரிபால சிறிசேனவின் சுகாதார அமைச்சுப் பதவி உட்பட்ட விலகிய அமைச்சர்களின் இடங்களுக்கு புதியவர்களை நியமிக்காமல், பிரதியமைச்சர்களை கொண்டு பணிகளை முன்கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments :
Post a Comment