பொது வேட்பாளரை களமிறக்க இணக்கம் ;மாதுலுவாவே சோபித தேரர் தலைமையில் எதிர்க்கட்சிகள் தீர்மானம்!

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்கி அதி­காரப்பகிர்­வி­னூ­டாக நாட்­டினை முன்­னெ­டுத்து செல்ல ஒன்­றி­ணைந்­துள்ள எதிர்க்­கட்­சிகள் அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது எதி­ர­ணியில் பொது வேட்­பாளர் ஒரு­வரை நிறுத்­து­வ­தற்கு இணங்­கி­யுள்­ளன.

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்கும் பொது நோக்கத்திற்காக முன்னாள் ஜனா­தி­பதி சந்தி­ரிகா குமா­ர­துங்க, எதிர்க்­கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம சிங்க, ஜே.வி.பி.யின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க, ஜன­நா­யகக் கட்­சியின் தலைவர் சரத் பொன்­சேகா, ஹெல­உ­று­ம­யவின் இணைத் தலைவர் அத்து­ர­லியே ரத்ன தேரர் ஆகியோர் நாளை பொது மேடையில் ஒன்று கூடு­கின்­றனர். நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்­கு­வது தொடர்பில் எதி­ர­ணி­களின் பொதுக் கூட்­ட­ணி­யினால் ஏற்­பாடுசெய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­தி ப்பு நேற்று கோட்டே சொலிஸ் ஹோட்­டலில் இடம்­பெற்­றது. இதன் போதே சகல எதிர்க்­கட்­சி­க­ளி­னாலும் இவ் இணக்­கப்­பாடு எட்டப்­பட்­டது.

மேலும் இச் செய்­தி­யாளர் சந்­திப்பில் கோட்டே நாக விகா­ரையின் விகா­ரா­தி­பதி மாது­லு­வாவே சோபித தேரர், ஐக்­கிய தேசியக் கட்சி பிரதிநிதிகள், ஜன­நா­யகக் கட்சி, ஜன­நா­யக மக்கள் முன்­னணி, தேசிய ஐக்­கிய முன் னணி, மௌபிம ஜனதா கட்சி, ஜன­நா­யக முன்­னணி, சிஹல உறு­மய,

ருகுணு ஜனதா கட்சி, ஐக்­கிய மக்­களின் முன்­னணி சமகி சம்­மே­ளனம், சுதந்­திர ஊடக மையம், பலமு பெர­முன ஜன­நா­யக தேசிய முன்­னணி தொழி­லாளர் முன்­னணி ஆகிய கட்­சி­களினதும் அமைப்­புக்­களினதும் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். 

மாது­லு­வாவே சோபித தேரர்

இதில் கருத்து தெரி­வித்த மாது­லு­வாவே சோபித தேரர் இதில் கருத்து தெரி­விக்­கையில்;

முழு நாடும் நிரா­க­ரித்­துள்ள ஒரு அர­சியல் அமைப்­பினை இன்று அர­சாங்கம் கொண்டு நடத்­து­கின்­றது. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்கி அதி­காரப் பகிர்­வி­னூ­டாக நாட்டின் ஆட்­சி­யினை முன்­னெ­டுத்து செல்ல வேண்டும் என சகல எதிர்க்­கட்­சி­களும் அமைப்­புக்­களும் ஏன் அர­சாங்­கத்தின் பங்­கா­ளிக்­கட்­சி­களும் கூட விரும்­பு­கின்­றனர். ஆனால் ஒரு சிலரின் சுய­நல தேவைக்­காக வேண்டி நாட்­டினை மோச­மான ஆட்­சியில் கொண்டு நடத்­து­கின்­றனர். ஐக்­கிய தேசியக் கட்­சியே இந்த அர­சியல் அமைப்­பினை கொண்டு வந்­தது. ஆனால் அவர்­களே இன்று இந்த அர­சியல் அமைப்­பினை மாற்ற விரும்­பு­கின்­றனர். அதற்கும் அப்பால் மக்­களே இவ் அர­சியல் அமைப்­பினை வெறுக்­கின்­றனர். இவ்­வாறு இருக்­கையில் அர­சாங்கம் ஏன் இதனை மாற்­றி­ய­மைப்­பதில் சிந்­திக்­கின்­றது.

ஜனா­தி­பதித் தேர்­தலை நடாத்­து­வ­தற்கு இப்­போ­தைக்கு எந்த தேவையும் இல்லை. அடுத்த ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு இன்னும் இரண்டு ஆண்­டுகள் உள்­ளன. இப்­போது தேவைப்­ப­டு­வதும் அனை­வரும் எதிர்­பார்ப்­பதும் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையின் நீக்­கத்­தி­னையே. அதற்கு ஜனா­தி­பதி இணங்­கா­விடின் அதற்கு பின்னர் எமது மாற்று நட­வ­டிக்­கை­யினை கையாள நேரிடும். நிறை­வேற்று முறை­மை­யினை நீக்கும் நோக்­கி­லேயே நாளை 12 ஆம் திகதி சகல எதி­ர­ணி­க­ளையும் அமைப்­புக்­க­ளையும் ஆளும் தரப்­பி­ன­ரையும் இணைத்துக் கொண்டு எதிர்ப்புப் பேர­ணி­யினை நடாத்­த­வுள்ளோம். இதில் எமது நிலைப்­பாட்­டினை ஜனா­தி­ப­திக்கு எடுத்து சொல்வோம். அதன் பின்னர் ஜனா­தி­பதி மாற்­றத்­தினை ஏறந்­ப­டுத்­தா­விடின் பொது எதி­ர­ணி­யினை தயார்­ப­டுத்தி அர­சாங்­கத்­திற்கு சவா­லான பொது வேட்­பா­ளரை கள­மி­றக்கி இந்த ஆட்­சி­யினை கவிழ்ப்­ப­தற்கு வேலைத் திட்­டங்­களை முன்­னெ­டுப்போம். அர­சியல் அமைப்பில் மாற்றம் சுயா­தீன சேவை­களின் செயற்­பாடு மற்றும் தேர்தல் முறை­மையில் மாற்றம் என்ற பிர­தான கோரிக்­கை­களே எமது எதிர்­பார்ப்பு. இதனை செயற்­ப­டுத்த பொது வேட்­பா­ள­ருடன் எதிர்க்க தயா­ரா­குவோம் எனத் தெரி­வித்தார்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க

செய்தியாளர் மாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கருத்து வெ ளியிடுகையில்;

நிறை­வேற்று முறை­மை­யினை நீக்க வேண்டும். அதற்­கான முதல் கட்­டத்­தினை இந்த பாரா­ளு­மன்றில் மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்­தினால் செய்ய வேண்டும். இந்த அர­சாங்கம் அதை செய்­யு­மானால் அதற்கு உட­னடி வேலைத் திட்­டங்­களை செய்ய வேண்டும். எமது நோக்கம் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை இல்­லா­தொ­ழித்து 17 ஆவது திருத்­தத்­தினை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதே. இந்த பாரா­ளு­மன்றில் அதற்­கான சகல நட­வ­டிக்­கை­க­ளையும் முயற்­சி­க­ளையும் எடுக்க வேண்டும். அது நடக்­கா­விடின் எமது அடுத்த கட்ட நகர்­வினை முன்­னெ­டுக்க நேரிடும். இன்று எமது சகல எதிர்க்­கட்­சி­க­ளு­ட­னான சந்­திப்பும் 12 ஆம் திகதி எமது பேர­ணியும் அதற்­கான ஆரம்­ப­மாக அமையும். அதில் சாத­க­மான முடி­வுகள் கிடைக்­கா­விடின் எமது அடுத்த செயற்­பாடு அமையும். அதா­வது தேர்­தலின் மூல­மாக மக்­களின் ஆத­ர­வுடன் இவ் நிறை­வேற்று முறை­மை­யினை நீக்க நேரிடும்.

தேர்­தலும் சுயா­தீ­ன­மாக இடம்­பெ­றுமா என்­பதில் சந்­தேகம். ஏனெனில் அர­சாங்­கமே தேர்தல் தினத்­தினை தீர்­மா­னிக்­கின்­றது. யாப்­பிற்கு முர­ணான தேர்­தலை நடத்த திட்­ட­மி­டு­கின்­றது. தேர்­தல்கள் ஆணைக்­குழு பொலிஸ் ஊட­கங்கள் என அனைத்­தையும் முடக்கி விட்­டார்கள். நாம் இவை அனைத்­தையும் வென்­றெ­டுக்க வேண்டும். அர­சாங்­கத்தின் பலத்தின் முன்­னி­லையில் மக்கள் பலம் இல்லை என ஜனா­தி­பதி கூறு­கின்றார். ஆனால் ஜனா­தி­ப­தியின் பலத்­திற்கு மேலான மக்கள் பலம் உள்­ளது. அதனை நாம் வென்­றெ­டுக்க வேண்டும். நாட்டின் ஜன­நா­ய­கத்­தையும் சுயா­தீன ?????? வென்­றெ­டுக்க வீதிக்கு இறங்கி போராட நாம் தயார். அதற்­காக நாம் அனை­வ­ரையும் இணைத்து ஒன்­றி­ணைந்து செயற்­பட தயார்.

சரத் பொன்­சேகா

செய்தியாளர் மாநாட்டில் ஜனநாயக் கட்சியின் தலைவர் சரத்பொன்சேகா கருத்து வெளியிடுகையில்

பொது எதி­ர­ணி­யினை ஒன்­றி­ணைக்கும் முயற்­சிகள் இன்று நடக்­கின்­றது. நானும் பொது எதி­ர­ணி­யினை அன்று ஒன்­றி­ணைத்தேன். ஆனால் அதன் பின்னர் எனக்கு நடந்த விட­யங்கள் மோச­மா­னது. எனினும் இன்றும் மீண்டும் பொது எதி­ரணி உரு­வாகி வரு­கின்­றது. சரி­யான பாதை­யினை தெரிவு செய்து நாட்டின் ஜன­நா­ய­கத்­தினை வென்­றெ­டுக்க நானும் ஒன்­றி­ணைந்து செயற்­படத் தயார். ஆனால் பொது வேட்­பாளர் என்­பது தூக்கு மேடையில் இருப்­பதைப் போன்­றது. வாழ்­விற்கும் சாவிற்கும் இடையில் உள்ள சவா­லான விடயம். எனவே, பொது வேட்­பா­ள­ராக தெரிவு செய்­யப்­படும் போது சரி­யா­ன­வ­ரா­கவும் தகு­தி­யா­ன­வ­ரா­கவும் இருக்க வேண்டும். அனை­வ­ராலும் ஏற்­றுக்­கொள்ள வேண்டும்.

அதேபோல் மக்­களும் சரி­யான முடி­வினை எடுக்க வேண்டும். அர­சியல் கலா­சா­ரத்தில் பக்க சார்­பான வ கையில் செயற்­ப­டாது நாட்டின் தேவை­யி­னையும் மக்­களின் பலத்­தி­னையும் சகல மக்­களும் உணர வேண்டும். கட்சி நிறங்கள் கொள்­கைகள் என்­ப­வற்­றினை மறந்து யார் சரி­யான பிர­தி­நிதி என்­பதை மக்கள் உணர்ந்து செயற்­பட வேண்டும். இந்த அர­சியல் கலா­சா­ரத்­தி­னையும் மாற்­றி­ய­மைக்க மக்கள் முன்­வர வேண்டும். அதேபோல் பொது வேட்­பா­ளரை தெரிவு செய்யும் போது சரி­யா­ன­வரை தெரிவு செய்ய வேண்டும். அனை­வரும் ஒன்­றி­ணைந்து தவ­றான தலை­வரை தெரிவு செய்தால் அதற்கு நாம் ஆத­ரவு வழங்­க­மாட்டோம் எனவும் தெரி­வித்தார்.

அர்­ஜுன ரண­துங்க

செய்தியாளர் மாநாட்டில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அர்­ஜுன ரண­துங்க கருத்து தெரி­விக்­கையில்;

ஜனா­தி­பதி முறை­மை­யினை மாற்­று­வது அவ­சி­ய­மா­ன­தென கடந்த காலங்­களில் இருந்தே சகல தரப்பும் கருத்து தெரி­வித்து வரு­கின்­றது. நாம் கடந்த கால வரலாற்றினை மறந்து விடக் கூடாது. தனி நபரின் கொள்கையினை ஓரம் கட்டி நாட்டின் பொது கொள்கையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பொது நிகழ்ச்சி நிரலில் கைகோர்க்க வேண்டும். தனி நபர் யாராக இருந்தாலும் பொது கொள்கையினை வென்றெடுக்க சகலரும் ஒன்றிணைய வேண்டும். அதற்கு இன்று நல்ல ஆரம்பம் கிடைத்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

செய்தியாளர் மாநாட்டில் மனோ கணேசன் கருத்து வௌியிடுகையில்;

இந்த ஊடக மாநாட்டில் நான் ஒரு தமிழ் கட்சியின் பிரதிநிதியாக கலந்துகொள்வதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஒரு தமிழ் கட்சி என்பதைவிட, தமிழர்களையும் உள்ளடக்கிய இலங்கை மக்களின் பிரதிநிதியாகவே நான் இங்கே கலந்து கொள்கின்றேன் என்று நினைக்கின்றேன். ஒரே குடும்பத்தின் அங்கத்தவர்களாக நாம் வாழவேண்டிய காலம் வந்துவிட்டது. சோபித தேரரின் வழிகாட்டலில் இங்குள்ள அனைத்து கட்சி தலைவர்களுடன் எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் தருணம் வந்துவிட்டது.

சில நாட்களுக்கு முன்னர் ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் இரத்தின தேரர் ஒரு முக்கிய விடயத்தை சொன்னார். 18ம் திருத்தத்திற்கு தாம் ஆதரவளித்ததை ஒரு தவறு என கூறினார். அதை அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு, நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவித்தார். இது ஒரு நல்ல முன்மாதிரி ஆகும். நாம் அனைவரும் ஏதோ ஒரு காலத்தில் அரசியல் தவறுகள் செய்துள்ளோம். ஐக்கிய தேசிய கட்சி தவறு செய்துள்ளது. எமது ஜனநாயக மக்கள் முன்னணி தவறு செய்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறு செய்துள்ளது. இந்த கருத்தை இங்கே கூடியுள்ள எல்லா கட்சி தலைவர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கின்றேன். நாம் அனைவரும் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு முன் செல்வோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்று இங்கே பலர் கேட்கிறார்கள். எனக்கு தெரிந்த வரையில் கூட்டமைப்பு, பொது வேட்பாளர் தொடர்பாகவும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. அவர்கள் ஒரு அவசரப்படாத கொள்கையை கடைபிடிக்கின்றார்கள் என எண்ணுகின்றேன். கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் ஒரு விடயத்தை மாத்திரம் இதுவரையில் தெளிவாக கூறியுள்ளார். எதிர்வரும் தேர்தல்களின் போது இந்நாட்டில் எவருக்கும் இனவாதத்தை கிளப்ப தாம் இடமளிக்க போவதில்லை எனக்கூறியுள்ளார். இது பாராட்டி வரவேற்கவேண்டிய நல்ல ஒரு பொறுப்புள்ள நிலைப்பாடு என எண்ணுகின்றேன்.

இங்கு பேசிய சரத் பொன்சேகா, கடந்த முறை தான் பொது வேட்பாளராக நியமிக்கப்பட்டதனால் பெருந்துன்பங்களை எதிர்கொண்டதாக சொன்னார். தேர்தலின் பிறகு தன்னை அனைவரும் கைவிட்டு விட்டதாகவும் சொன்னார். உண்மைதான், பொது வேட்பாளர் என்றால் துன்பங்களுக்கு முகங்கொடுக்க தயாராக வேண்டும். எமது வேட்பாளர் ஒரு பெண்ணோ அல்லது ஆணோ, அவர் அதற்கு தயாராக வேண்டும்.

ஆனால், சரத் பொன்சேகா ஒன்றை ஞாபகப்படுத்தி கொள்ள வேண்டும். அவர் கடைசியாக இழுத்து செல்லப்பட்ட தருணம் வரை நான் அவருடன் இருந்தேன். அவரை இந்த உலகிலேயே மிக சிறந்த இராணுவ தளபதி என்று கூறிய அதே அரசாங்கமே, அவரை இழுத்துக்கொண்டு போய் சிறையில் அடைத்தது. என் கண் முன்னால் இது நடந்தது. எனவே எதுவும் நடக்கலாம். நாம் அனைத்துக்கும் தயாராக இருக்க வேண்டும்.

இந்த சர்வாதிகார நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறைமைக்கு எதிராக, சோபித தேரர் இரண்டு வருடங்களாக நடத்திய தேசிய இயக்கத்தின் மூலமாக இன்று இந்த நாட்டின் பிரதான கட்சிகளை இணைத்து ஒரு பொது மேடைக்கு கொண்டு வந்துள்ளார். அதற்காக அவருக்கு நான் இந்நாட்டு மக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கின்றேன் என்றார்.

இதேவேளை எதிர்வரும் 12 ஆம் திகதி (நாளை) சகல எதிர்க்கட்சிகளும் அமைப்புக்களும் மட்டுமன்றி அரசியல் பிரமுகர்களும் ஆளும் கட்சியின் உறுப்பினர்களும் பொது கொள்கையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்குவது தொடர்பில் எதிர்ப்புப் பேரணியொன்றினை நடத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :