ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை 12 ஆம் பிரிவின் கிளைக்குழுத் தெரிவு!

 பைஷல் இஸ்மாயில்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை 12 ஆம் பிரிவின் கிளைக்குழுத் தெரிவு அட்டாளைச்சேனை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் நேற்று (30) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான ஐ.எல்.எம்.நஸீர், எஸ்.எல்.முனாஸ் மற்றும் மு.காவின் உயர்பீட உறுப்பினர் யு.எல்.வாஹிட் ஆகியோர் கட்சியினதும், கிளைக்குழுவின் அங்கத்துவம் பற்றியும் அதில் இடம்பெறுகின்றவர்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமையப்பெறுதல் வேண்டும் என்பன பற்றி மிகத் தெளிவான விளக்கத்தினையும் எடுத்துரைத்தனர். 

குறித்த பிரிவுக்கு செயலாளராக தெரிவு செய்யப்பட்ட எம்.ஏ.ஜௌபர் ஆசிரியரிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர் ஆவணங்களை கையளித்து வைத்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :