ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை 12 ஆம் பிரிவின் கிளைக்குழுத் தெரிவு அட்டாளைச்சேனை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் நேற்று (30) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான ஐ.எல்.எம்.நஸீர், எஸ்.எல்.முனாஸ் மற்றும் மு.காவின் உயர்பீட உறுப்பினர் யு.எல்.வாஹிட் ஆகியோர் கட்சியினதும், கிளைக்குழுவின் அங்கத்துவம் பற்றியும் அதில் இடம்பெறுகின்றவர்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமையப்பெறுதல் வேண்டும் என்பன பற்றி மிகத் தெளிவான விளக்கத்தினையும் எடுத்துரைத்தனர்.
குறித்த பிரிவுக்கு செயலாளராக தெரிவு செய்யப்பட்ட எம்.ஏ.ஜௌபர் ஆசிரியரிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர் ஆவணங்களை கையளித்து வைத்தார்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment