அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றில் மூழ்கி அஸ்மீர் எனும் இளைஞன் மரணம்

பைஷல் இஸ்மாயில்),ஏ.எல்.ஜனூவர்-

அட்டாளைச்சேனை, கோணாவத்தை முகத்துவாரம் பகுதியில் சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் . அத்துடன், மற்றுமொரு சிறுவன் மீட்கப்பட்டு அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டாளைச்சேனை றஹ்மானியாபாத் 7 ஆம் பிரிவைச் சேர்ந்த எம்.எச்.அஸ்மிர் என்ற 17 வயது சிறுவனே இவ்வாறு நீரில் மூழ்கி மரணமாகியுள்ளார்.

முகத்துவாரம் பகுதிக்கு தனது நண்பர்களுடன் இன்று (07) காலை குளிக்கச் சென்ற மேற்படி நண்பர்கள் இருவரும் நீரில் மூழ்கியுள்ளதுடன் மூழ்கிய இவர்களில் ஒருவரை மீனவர்கள் மீட்டு அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பிட்ட இடத்தில் இதற்க்கு முன்னரும் இது போன்று பல இளைஞர்கள் நீரில் மூழ்கி மரணித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :