.jpg)
கவிஞர் ரீ. எல். ஜவ்பர்கானினால் தொகுப்பாசிரியராகக் கொண்டு பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வின் பணிகளைப் பாராட்டி இலங்கையிலுள்ள 50 பிரபல்யமிக்க கவிஞர்களால் எழுதப்பட்ட நதியைப்பாடும் நந்தவனங்கள் எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் சமீபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரபல்மிக்க 50 கவிஞர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா பொற்கிழியும் பொன்னாடையும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதில் கவிஞரும், சிரேஷ்ட ஊடவியலாளருமான இக்பால் அலி மற்றும் புசல்லாவ இஸ்மாலிகா ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இம்போட்மிரர் இணையத்தளத்துக்காக உடனுக்குடன் செய்திகளை வழங்கும் சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அலி அவர்களை இம்போட்மிரர் ஊடக வலையமைப்பின் நிருவாகம் மனமுவர்ந்து பாராட்டுகிறது.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment