வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் ஏற்பாடு செய்த ஊர்வலம்



த.நவோஜ்-

ர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தில் உள்ள வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் மற்றும் பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயம் என்பவற்றில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன.

ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் 'சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்போம்' என்ற தலைப்பில் ஊர்வலம் நடாத்தியதுடன், பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயம் மாணவர்களுக்கிடையில் விளையாட்டு நிகழ்ச்சிகளையும் நடாத்தியது.

வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் ஏற்பாடு செய்த ஊர்வலம் பாடசாலையில் இருந்து ஆரம்பமாகி வை.எம்.எம்.ஏ.வீதி, ஆலிம் வீதி, வாழைச்சேனை பிரதான வீதி, முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் வீதி வழியாக மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.

இரண்டு பாடசாலைகளின் நிகழ்வுகள் பாடசாலைகளின் அதிபர்களான எம்.ரீ.எம்.பரீட், எம்.யூ.இஸ்மாயில் ஆகியோரின் தலைமையில் இடம் பெற்றதோடு, இந்நிகழ்வில் ஓட்டமாவடி கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எல்.மீராசாஹிப் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :