பொதுபல சேனாவுடன் கூட்டுச் சேர ஏன் மறுத்தது ஆர்.எஸ்.எஸ்

ண்­மையில் மியான்­மாரின் கடும்­போக்­கு­வாத 969 அமைப்­புடன் கூட்டுச் சேர்ந்து கொண்ட, இலங்­கையின் கடும்­போக்­கு­வாத பௌத்த அமைப்­பான பொதுபல சேனாவின் அடுத்த கட்டத் திட்டம் பிசு­பி­சுத்துப் போயி­ருக்­கி­றது.

இந்­தி­யாவின் இந்து தேசி­ய­வாத ஆர்.எஸ்.எஸ். அமைப்­புடன் கூட்டுச் சேரும் பொதுபல சேனாவின் முயற்­சியே தோல்வி கண்­டி­ருக்­கி­றது.

இந்­தி­யாவில் உள்ள இந்து தேசி­ய­வாத அமைப்­பான 'ராஷ்­ரிய சுவ­யம்­சேவக் சங்' தான் சுருக்­க­மாக ஆர்.எஸ்.எஸ். என்று அழைக்­கப்­ப­டு­கி­றது.

இந்­தி­யாவைத் தற்­போது ஆட்சி செய்யும் பா.ஜ.க. அர­சாங்­கத்தின் ஆணிவேர் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்­பையே குறிப்­பி­டலாம்.

இது அர­சி­யலில் வெளிப்­ப­டை­யாக ஈடு­ப­டாது, தேர்­தல்­களில் போட்­டி­யி­டாது. ஆனால், பார­திய ஜனதா கட்­சியின் மூலம், அர­சி­யலைத் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக விளங்­கு­கி­றது.

முன்னாள் பிர­தமர் அடல் பிகாரி வாஜ்பாய் மட்­டு­மன்றி, இப்­போ­தைய பிர­தமர் நரேந்­திர மோடியும் கூட, ஆரம்­பத்தில், ஆர்.எஸ்.எஸ். தொண்­டர்­க­ளாக இருந்தே தலை­வர்­க­ளாக உயர்ந்­த­வர்கள்.

தற்­போ­தைய இந்­திய அமைச்­ச­ர­வையில் இருக்­கின்ற பலரும் கூட இதே­போன்று ஆர்.எஸ்.எஸ் பின்­ன­ணியில் அர­சி­ய­லுக்கு வந்­த­வர்கள் தான்.

இந்­தி­யாவை பா.ஜ.க. ஆட்சி செய்­தாலும், அதன் கொள்­கைகள் திட்­டங்­களைத் தீர்­மா­னிப்­பதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்­புக்கும் கணி­ச­மான பங்கு இருக்­கி­றது.

அந்­த­ள­வுக்கு பா.ஜ.க.வில் செல்­வாக்குச் செலுத்­து­கின்ற அமைப்­பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இருக்­கி­றது.

ஆர்.எஸ்.எஸ். ஒரு இந்து தேசி­ய­வாத அமைப்­பாகும். பல்­லின, பல மத, பல மொழி­களைக் கொண்ட நாடான இந்­தி­யாவின் மதச்­சார்­பின்மைக் கொள்­கைக்கு, அவ்­வப்­போது சவால்­ மிக்­க­தொரு சக்­தி­யா­கவே ஆர்.எஸ்.எஸ். விளங்­கு­கி­றது.

அதா­வது, இந்து தேசி­ய­வா­தத்தை நிலை­நாட்­டு­வ­தற்­காக இந்து மதத்­துக்­காக எதையும் செய்யத் தயா­ராக இருக்கும் ஒரு அமைப்­பா­கவே இது இருக்­கி­றது.

அயோத்­தியில் பாபர் மசூதி இடிக்­கப்­பட்­ட­தற்கு காரணம், இந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புத் தான்.

ஆர்.எஸ்.எஸ். கர­சே­வ­கர்கள், அயோத்­தியில் மீண்டும் ராமர் கோவிலைக் கட்டப் போவ­தாக, பாபர் மசூ­தியை நோக்கிப் பேர­ணி­யாகச் சென்ற போது, அப்­போது உத்­தரப் பிர­தே­சத்தில் ஆட்­சியில் இருந்த கல்­யாண் சிங் தலை­மை­யி­லான பா.ஜ.க. அர­சாங்கம் தடுத்து நிறுத்த முனை­ய­வில்லை.

ஆயி­ரக்­க­ணக்­கான ஆர்.எஸ்.எஸ். தொண்­டர்கள், கண்­மூடி முழிப்­ப­தற்குள், பாபர் மசூ­தியை இடித்து விட்டு, அங்கு ஒரு இராமர் சிலையை நிறுவி சிறிய கோவில் கட்­டு­மா­னத்­தையும் மேற்­கொண்­டனர். 
1993ஆம் ஆண்டு நடந்த சம்­பவம் இது.

இன்று வரை, பாபர் மசூ­தியைப் பாது­காக்கும் நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை, அப்­போது கட்­டப்­பட்ட இராமர் கோவிலை அகற்­றவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. அனை­வ­ருக்கும் தடை செய்­யப்­பட்ட பகு­தி­யா­கவே அது இருக்­கி­றது.

பல்­வே­று­பட்ட நாடுகள், இனங்கள், மதங்­களின் படை­யெ­டுப்­புக்கு உட்­பட்ட இந்­தி­யாவில், பல இந்து ஆல­யங்கள் அழிக்­கப்­பட்டு, அவற்றின் மீது பிற மத வழி­பாட்டுத் தலங்கள் கட்­டப்­பட்­ட­தாக வர­லாறு உள்­ளது. அது­போலத் தான், அயோத்­தி­யிலும் ராமர் கோவில் அழிக்­கப்­பட்டு, மசூதி கட்­டப்­பட்­ட­தாக கூறு­கி­றது வர­லாறு.

அந்த மசூ­தியை இடித்து, விட்டு அதன் மீது ஒரு சில மணி­நே­ரங்­களில் ராமர் சிலையை பிர­திஷ்டை செய்து கோவிலைக் கட்டும் அள­வுக்கு வலு­வான அமைப்­பாக விளங்­கு­கி­றது ஆர்.எஸ்.எஸ்.

அத்­துடன், இஸ்­லா­மிய மதப் பர­வலைத் தடுக்கும் கடும்­போக்­கு­வாதம், இதன் அடிப்­படைக் கொள்­கை­யா­கவே இருக்­கி­றது. இந்­தி­யாவை ஆட்சி செய்யும் பா.ஜ.க.வுக்கு ஆர்.எஸ்.எஸ். ஒரு பெரும் பல­மா­கவே இருந்­தாலும், அதன் பல­வீ­ன­மாக இருப்­பதும், ஆர்.எஸ்.எஸ். தான்.

பா.ஜ.க. குறித்து சிறு­பான்­மை­யி­னத்­த­வர்கள் அச்சம் கொள்­வ­தற்கும், அது மத்­தி­யிலும் மாநி­லங்­க­ளிலும் பல­முறை ஆட்­சியை இழப்­ப­தற்கு அல்­லது ஆட்­சியில் ஏறு­வ­தற்­கான வாய்ப்பை இழப்­ப­தற்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கடும் போக்­கு­வா­தமும் ஒரு காரணம்.

இந்­தி­யா­வி­லுள்ள மத சிறு­பான்­மை­யி­ன­ருக்கு ஆர்.எஸ்.எஸ். அச்­சு­றுத்­த­லுக்­கு­ரிய ஒரு அமைப்­பா­கவே தெரி­கி­றது என்­பது வெளிப்­ப­டை­யான உண்மை. அதிலும் குறிப்­பாக, இஸ்­லா­மி­யர்­க­ளுக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்­புக்கும் இடையில், ஒரு பனிப்போர் எப்­போ­துமே நிகழ்ந்து கொண்­டி­ருக்­கி­றது.

இந்தச் சந்­தர்ப்­பத்தில் தான், ஆர்.எஸ்.எஸ். அமைப்­புடன் கைகோர்க்க முயற்­சித்­தது பொதுபல சேனா. மியான்­மாரின் 969 அமைப்­புடன் பொதுபல சேனா செய்து கொண்ட உடன்­பாட்­டுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்­புடன் இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு, பொதுபல சேனா மேற்­கொண்ட முயற்­சிக்கும் இடையில் பெரும் வித்­தி­யா­சங்கள் உள்­ளன.

தெற்­கா­சியப் பிராந்­தி­யத்தில், அமை­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும், இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ராகப் போரா­டு­வ­தற்­கா­கவும், தான் மியான்­மாரின் 969 அமைப்பின் தலை­வ­ராக இருக்கும், அசின் விராது தேர­ருடன் உடன்­பாடு செய்து கொண்­ட­தாக பொதுபல சேனா கூறி­யி­ருந்­தது.

விராது தேரரின் 969 அமைப்பு, மியான்­மாரில், சிறு­பான்மை முஸ்­லிம்­களைக் கொன்று குவிக்கும், அவர்­களின் வீடு­களை எரித்து, இன அழிப்பில் ஈடு­ப­டு­கின்ற ஒரு தீவி­ர­வாத அமைப்­பாகும்.

அந்த அமைப்பின் செயற்­பா­டு­க­ளையும் பொதுபல சேனா முன்­னு­தா­ர­ணமாக் கொண்டு செயற்­ப­டு­கி­றது. இலங்­கையில் அண்­மைக்­கா­லத்தில் நிகழ்ந்து வந்த முஸ்லிம் மற்றும் கிறிஸ்­த­வர்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் அத்­த­கை­ய­வையே.

ஆனால், மியான்­மாரின் 969 அமைப்பு போன்று தொடர்ச்­சி­யான வன்­மு­றை­கைளைக் கையில் எடுக்கும் அமைப்­பாக ஆர்.எஸ்.எஸ். விளங்­க­வில்லை. இந்­தியா போன்­ற­தொரு நாட்டில், அத்­த­கைய போக்­குடன் செயற்­பட முடி­யாது.

ஆர்.எஸ்.எஸ். கடு­மை­யான இந்து தேசி­ய­வாதப் போக்கை கடைப்­பி­டித்­தாலும், மிகவும் தந்­தி­ர­மான முறையில் தமது கொள்­கையை அர­சியல் மயப்­ப­டுத்­தி­யுள்­ளது. அதே உத்­தி­யையே இப்­போது பொதுபல சேனாவும் கையாள முனை­கி­றது.

அர­சி­யலில் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக உரு­வெ­டுப்­பதே பொதுபல சேனாவின் இப்­போ­தைய இலக்கு. அண்­மையில் 5000 பிக்­கு­களைக் கூட்டி நடத்­திய மாநாடு அதற்­கான அடித்­தளம் தான்.

இந்த 5000 பிக்­கு­களும் ஒவ்­வொரு கிரா­மத்­திலும், 100 பேரை தம் கைக்குள் போட்டுக் கொண்டு, 50 இலட்சம் வாக்­கு­களைத் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக மாற நினைக்­கி­றது பொதுபல சேனா.

அது பொதுபல சேனா மாநாட்டில் பகி­ரங்­க­மா­கவே கூறப்­பட்ட திட்டம். இந்த ஆத­ரவுத் தளத்தைப் பயன்­ப­டுத்திக் கொண்டு, நாட்டைச் சிங்­கள பௌத்த மயப்­ப­டுத்தும் கட்­சிக்கு அல்­லது வேட்­பா­ள­ருக்கே தமது ஆத­ரவு என்று பேரம் பேச முனை­கி­றது.

கிட்­டத்­தட்ட ஆர்.எஸ்.எஸ். பாணியில், ஒரு அர­சியல் சக்­தி­யாக எழுச்சி பெற எத்­த­னிக்­கி­றது. இன்­னொரு பக்­கத்தில், இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ராக ஒன்­றி­ணை­வ­தற்­கா­கவே ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் கூட்டுச் சேர­வுள்­ள­தா­கவும், அது­பற்றிப் பேச்சு நடத்­தப்­ப­டு­வ­தா­கவும் கடந்த வாரம் கூறி­யி­ருந்தார் பொதுபல சேனாவின் பொதுச்­செ­யலர் ஞான­சார தேரர்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். அந்த அழைப்பை நிரா­க­ரித்து விட்­டது. அத்­த­கைய பேச்­சுக்கள் யாரு­டனும் நடத்­தப்­ப­ட­வில்லை என்றும், சர்­வ­தேச மட்­டத்தில், கூட்டுச் சேரும் திட்டம் ஏதும் தமக்கு இல்லை என்றும், ஆர்.எஸ்.எஸ். பேச்­சாளர் ராம் மாதவ் தெரி­வித்து விட்டார்.

ஆர்.எஸ்.எஸ்.ஐ கைக்குள் போட்டுக் கொண்டால், புது­டில்­லியை கைக்குள் வைத்­தி­ருக்­கலாம். இந்­தியப் பிர­த­மரை விரைவில் சந்­தித்து, பய­னற்ற 13வது திருத்­தச்­சட்­டத்தை நீக்­கு­வது குறித்துப் பேசப் போவ­தா­கவும் ஞானசார தேரர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அதா­வது இந்­திய மத்­திய அர­சுடன் தொடர்பை ஏற்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கான வாய்ப்பை ஆர்.எஸ்.எஸ். மூலம் பெற முனைந்­துள்­ளது பொதுபல சேனா.

இந்து தேசி­ய­வாத சக்தி என்­பதால், இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்தைக் காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் கூட்டுச் சேரலாம் என்று தப்­புக்­க­ணக்குப் போட்டு விட்­டது பொதுபல சேனா.

இதே­போன்று தான், இலங்­கை­யிலும், இந்­துக்­களை, தமிழ் கிறிஸ்­த­வர்கள் மற்றும் இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு எதி­ரா­கவும் திருப்­பி­விட முனைந்­தது.

சிறு­பான்மை மதத்­தி­னரைப் பிரித்­தாளும் பொதுபல சேனாவின் திட்­டத்­துக்கு இலங்­கை­யி­லுள்ள தமி­ழர்கள் குறிப்­பாக இந்­துக்கள் பலிக்­க­டா­வாகத் தயா­ராக இல்லை.
ஆர்.எஸ்.எஸ். இந்த விட­யத்தில் கைகொ­டுக்கும் என்று எதிர்­பார்த்­தது பொதுபல சேனா. ஆனால், ஆர்.எஸ்.எஸ். அதற்கு மறுத்து விட்­டது, பொதுபல சேனா­வுக்கு கிடைத்த பலத்த அடி­யாகும்.

இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­துக்கு எதி­ரான போக்கை ஆர்.எஸ்.எஸ். கொண்­டி­ருந்­தாலும், பொதுபல சேனா­வுடன் கூட்டுச் சேர அது தயா­ராக இல்­லா­த­மைக்கு முக்­கி­ய­மான காரணம், இந்­தி­யா­வுக்கு உள்ள இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதம் பற்­றிய அச்­சு­றுத்தல் தான்.

பாகிஸ்தான், ஆப்­கா­னிஸ்தான் ஆகிய நாடு­களில் இருந்து மிகச்­சு­ல­ப­மா­கவே இஸ்­லா­மிய தீவி­ர­வாதம் இந்­தி­யா­வுக்குள் பரவும் ஆபத்து இருந்து வரு­கி­றது. ஏற்­க­னவே அல்­கெய்­தாவும், ஐ.எஸ் அமைப்பும் இந்­தி­யா­வுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளன.

இந்தக் கட்­டத்தில், மிகவும் அவ­தா­ன­மா­கவும் தந்­தி­ர­மா­கவும் நடந்து கொள்ளத் தவ­றினால், அது இந்­தி­யாவின் ஒரு­மைப்­பாட்­டுக்கும் உறு­திக்கும், பாது­காப்­புக்­குமே ஆபத்­தாக அமையும்.

எனவே, ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து தேசி­ய­வாத அமைப்­புகள் இஸ்­லா­மிய எதிர்ப்­பு­ணர்வு விட­யத்தில், அடக்கி வாசிக்­கவே முனை­கின்­றன.

நரேந்­திர மோடி அர­சாங்கம், இஸ்­லா­மி­யர்­களை அர­வ­ணைத்துச் செல்­லவே முனை­கி­றது. குறு­கிய காலத்தில், நரேந்­திர மோடி அர­சாங்கம் கணி­ச­மான முஸ்­லிம்­களின் நம்­பிக்­கையை பெற்­றுள்­ள­தற்கு, இந்த மாற்­றமும் ஒரு காரணம்.

அதே­வேளை, இலங்­கையில் பொதுபல சேனா முன்­னெ­டுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள், இஸ்­லா­மிய தீவி­ர­வாதம் இலங்­கை­யிலும், இந்­தி­யா­விலும் பர­வு­வ­தற்­கான இடை­வெ­ளியைத் தோற்­று­வித்து விடும் என்று இந்­தியப் பாது­காப்பு நிபு­ணர்கள் பலரும் எச்­ச­ரித்து வரு­கின்­றனர்.

மிக அண்­மையில் கூட புது­டில்­லியைத் தள­மாக கொண்டு செயற்படும் Security Risks Asia என்ற அமைப்பின் பணிப்பாளரும், ஓய்வுபெற்ற இந்திய இராணுவ அதிகாரியுமான பிரிகேடியர் ராகுல் பொன்ஸ்லே, பொதுபல சேனாவுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பிளவு, அதிகரித்துச் செல்வது, ஐ.எஸ் தீவிரவாதம் இலங்கையில் வேரூன்றுவதற்குக் காரணமாகி விடும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இத்தகைய நிலையில், முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகள் இருந்தாலும், இந்தியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து அமைப்புகள் செயற்படுகின்றன.

ஆனால், பொதுபல சேனா, இஸ்லாமிய தீவிரவாத எதிர்ப்பு என்ற கோஷத்தை எழுப்பி, இலங்கையில் அரசியல் அதிகாரத்தைப் பிடிக்க முனைகிறது. எனவே தான் பொதுபல சேனாவுடன் இணைய ஆர்.எஸ்.எஸ். மறுத்து விட்டது.

பொதுபல சேனாவின் இந்த முஸ்லிம் எதிர்ப்பு உணர்வு, பௌத்த மதத்தைப் பாதுகாக்கவோ, வலுப்படுத்திக் கொள்வதற்கோ பதிலாக, பிராந்தியத்தில் இஸ்லாமிய தீவிரவாதம் வேரூன்றுவதற்குத்தான் காரணமாகப் போகிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :