வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பை புறக்கணிக்க ஜாதிக ஹெல உறுமய தீர்மானம்!

2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது புறக்கணிப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளது. 

அரசியலமைப்பில் 19வது திருத்தம் தொடர்பில் தாம் முன்வைத்த யோசனைகள் குறித்து சிறீலங்கா சுதந்திர கட்சி இறுதி முடிவு அறிவிக்காததால் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமய விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்னர் யாப்பு மாற்றம் மற்றும் அரசியல் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என ஹெல உறுமய அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்துள்ளது. இந்த யோசனைகள் குறித்து ஆராய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :