அம்பாறை தமிழ் மக்களை மு.கா.வுக்கு தாரை வார்த்துக் கொடுக்கிறது த.தே.கூட்டமைப்பு!

ம்­பாறை மாவட்ட தமிழ் மக்­களை முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் செயற்­பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஈடு­பட்­டுள்­ளது. அம்­பாறை மாவட்ட தமிழ் மக்­களை கறி­வேப்­பி­லை­யாக பயன்­ப­டுத்தும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு தமிழ் மக்கள் எதிர்­வரும் தேர்­தல்­களில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் இனி­ய­பா­ரதி தெரி­வித்தார்.

கல்­முனைப் பிர­தேச மக்கள் முகம் கொடுத்­துள்ள அர­சியல் நெருக்­கடி சம்­பந்­த­மான கலந்­து­ரை­யாடல் கூட்டம் பாண்­டி­ருப்பு கிராம அபி­வி­ருத்திச் சங்க கட்­ட­டத்தில் நடை­பெற்­றது. அதன்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில்,

அம்­பாறை மாவட்ட தமிழ் மக்­களின் அபி­வி­ருத்­திக்கும் உரி­மைக்கும் இருப்­புக்கும் சவா­லாக இன்று முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் உள்­ளார்கள்.

இதனை இங்­குள்ள அனைத்து தமிழ் மக்­களும் நன்­கு­ணர்­வார்கள். இந்­நி­லையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மைகள் முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் ஒப்­பந்தம் செய்து மாவட்ட தமிழ் மக்­களை அவர்­க­ளிடம் அடகுவைக்கும் நட­வ­டிக்­கையில் திரை­ம­றைவில் ஈடு­பட்­டுள்­ளனர்.

காலம் கால­மாக இங்­குள்ள தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரின் பசப்பு வார்த்­தை­களில் மயங்கி வாக்­க­ளித்து கண்ட பயன் ஏது­மில்லை. இன்று கூட்­ட­மைப்­புக் குள்ளே முரண்­பா­டுகள் அதி­க­ரித்­துள்­ளன. அம்­பாறை மாவட்­டத்தைப் பொறுத்­த­வரை இங்­குள்ள தமிழ் மக்கள் முஸ்லிம் பேரி­ன­வா­தி­களால் பாதிக்­கப்­படும் வர­லாறே தொடர்கதையாய் உள்­ளது. இதற்கு தமிழ்க் கூட்­ட­மைப்பின் போக்கும் துணை­யா­க­வுள்­ளது.

அம்­பாறை மாவட்­டத்தில் இன்னும் பத்து வரு­டங்­க­ளுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இருக்­கு­மானால் இம்­மா­வட்­டத்தில் தமிழ் மக்­களின் இருப்­புக்கள் பறி போய் விடும். வெறும் பத்­தி­ரிகை அர­சியல் மட்டும் செய்துகொண்டு மக்­களை ஏமாற்றும் அர­சி­ய­லையே கூட்­ட­மைப்பு செய்து கொண்­டி­ருக்­கின்­றது.

என்­றைக்கு தமி­ழ­ர­சுக்­கட்­சியை விட்டு முஸ்லிம் காங்­கிரஸ் வில­கி­யதோ அன்­றைக்கே அச்­ச­மூகம் உயர்ந்­தது. இன்னும் பழைய பல்­ல­வி­களை பாடிக்­கொண்டு ஈழக்­க­னவில் மிதக்கும் கூட்­ட­மைப்­பினால் தமிழ் மக்­களின் ஒரு அபி­லா­ஷையைத் தானும் நிறை­வேற்ற முடி­யாது.

அம்­பாறை மாவட்ட தமிழ் மக்கள் அர­சாங்­கத்தை ஆத­ரிப்­பதன் மூலம் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதோடு பொரு­ளா­தா­ரத்­தையும் மீளக்­கட்­டி­யெ­ழுப்ப முடியும்.

இம்­முறை இம்­மா­வட்ட மக்கள் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை புறந்­தள்ளி விட்டு எனக்கு அர­சாங்­கத்தை ஆதரிப்பதற்கு அனுமதி தந்தால் இங்குள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை 10 வருடங்களுக்குள் மாற்றிக்காட்டுவேன். எதிர்வரும் தேர்தல் களில் அரசாங்கத்தை ஆதரிக்கும் செயற்பா ட்டில் தமிழ் மக்கள் களமிறங்க வேண்டும் எனவும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :