ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வடமாகாணத்திற்கான மூன்று நாள் விஜயத்தின் போது பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடலொன்று அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, றிஷாத் பதியுதீன் மற்றும் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோரின் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், வடமாகாண மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், இராணுவ, பொலிஸ், கடற்படை உயரதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
0 comments :
Post a Comment