ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு அம்­பாறை மாவட்ட விவ­சா­யிகள் நன்றி தெரி­விப்பு!

நெல்லின் உத்­த­ர­வாத விலையை அதி­க­ரித்து தொடர்ந்தும் ரூபா 350 மானிய விலையில் உரம் வழங்க நட­வ­டிக்கை மேற்­கொண்ட ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு அம்­பாறை மாவட்ட விவ­சா­யிகள் நன்றி தெரி­வித்­துள்­ளனர்.

2015ஆம் ஆண்டு வரவு –- செல­வுத்­திட்ட முன்­மொ­ழி­வினை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்து உரை­யாற்­றிய ஜனா­தி­பதி 34 ரூபா­வா­க­வி­ருந்த நெல் உத்­த­ர­வாத விலை யை 40 ரூபா­வாக அதி­க­ரித்து மானிய உரம் தொடர்ந்தும் 350 ரூபா­வுக்கு வழங்­கப்­படும் எனவும் குறிப்­பிட்டார். 

நாட்டின் மொத்தத் தேசிய நெல் உற்­பத்­தியில் 20 வீத பங்­க­ளிப்பை அம்­பாறை மாவட்ட விவ­சா­யிகள் நல்கி வரு­கின்­றனர். அம்­பாறை மாவட்­டத்தில் அதி­க­மான பரப்­ப­ளவு காணியில் நெற்­செய்கை பண்­ணப்­ப­டு­வ­துடன் அதி­க­மான மக்­களும் நெற்­செய்­கையில் ஈடு­பட்­டுள்­ளனர். 

மேற்­படி சலு­கை­களின் மூலம் மாவட்­டத்­தி­லுள்ள அனைத்து விவ­சா­யி­களும் நன்­மை­ய­டையும் நிலை­யேற்­பட்­டுள்­ளது. கடந்த காலங்­களில் தொடர்ச்­சி­யான நஷ்­டத்தை எதிர்­கொண்டு வந்த விவ­சா­யிகள் உத்­த­ர­வாத நெல் விலை, மஹிந்த சிந்­தனை வேலைத்­திட்­டத்தின் மூலம் வழங்­கப்­பட்ட மானிய விலை உரச்­ச­லுகை என்­ப­ன­வற்றின் மூலம் இலா­ப­ம­டைந்து வந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. உரத்­திற்­கான உற்­பத்திச் செலவு அதி­க­ரித்­துள்ள இன்­றைய காலகட்­டத்­திலும் உர­மா­ னியச் சலு­கையை தொடர்ந்தும் விவ­சா­யி­க­ளுக்கு வழங்க முன்­வந்­த­தை­ய­டுத்து நெற்­செய்­கையில் புதி­தாக இணைந்து கொள்­ப­வர்­களின் தொகை அதி­க­ரித்து வரு­கின்­றது.

கடந்த சிறுபோகத்தின் போது நெல் விலை கணி­ச­மா­ன­ளவு அதி­க­ரித்­த­தனால் விவ­சா­யிகள் அதிக இலாபம் ஈட்­டினர். தொடர்ந்தும் விவ­சா­யிகள் அதிக இலாபம் ஈட்டத்தக்க வகையில் நெல்லுக்கான உத்தரவாத விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விவசாயிகளுக்கு சலுகைகளை வழங்கிய ஜனாதிபதிக்கு விவசாயிகள் நன்றி தெரிவிக்கின்றனர்.
<வீர>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :