எம்.ஐ.பிர்னாஸ்-
அட்டாளைச்சேனை அந்-நுார் மகா வித்தியாலய ஆசிரியர்களின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை 6ஆம் பிரிவில் உள்ள பொதுமையவாடி சிரமதான நிகழ்வு இன்று நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் ஏ.எம்.எம்.இத்ரீஸ் தலைமையில் நடைபெற்ற இச்சிரமதான நிகழ்வில் அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலய அதிபர் எம்.ஏ.அன்சார், அட்டாளைச்சேனை அல்-ஜெஸீரா வித்தியாலய அதிபர் எம்.ஐ.றியாஸ், பிரதி அதிபர் எம்.ஐ.ஹாசீம், பகுதித்தலைவர்களான ஐ.ஏல்.நஸீர், ஏ.ஜீ.பௌஸ், எம்.ஐ.முஸ்ஸம்மில், மௌலவி சிராஜ், உட்பட சிரேஷ்ட ஆசிரியர்கள் பாட ரீதியான ஆசிரியர்கள் வகுப்பாசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு சிரமதான நிகழ்வில் ஈடுபட்டனர்.
இச் சிரமதான நிகழ்வு சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கி சகல ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இதன் போது அதிபர் இத்ரீஸ் நன்றியை தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment