ஜனாதிபதி தேர்தலில் நானே ஆட்சியினைக் கைப்பற்றுவேன்! சவாலை ஏற்றுக்கொள்ள தயார்-ரணில்

னா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவினை வெற்றிக் கொள்­வ­தற்­கான சவாலை ஏற்றுக் கொள்ள நான் தயார். எனவே 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்தல் வெற்­றி­யி­னூ­டாக ஆட்­சி­யினை நானே கைப்­பற்­றுவேன் என எதிர்க்­கட்­சி­த­லை­வரும் ஐ.தே.க.தேசிய தலை­வ­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

இதே­வேளை ஜனா­தி­பதி நாட்­டிற்கு செய்த துரோ­கங்­களில் முதன்­மை­யா­னது. சரத் பொன்­சே­கா­விற்கு வழங்­காத வாக்­கு­ரிமை தற்­போது கே.பி.க்கு வழங்­கப்­பட்­டுள்­ளதாகும். எனவே, இந்த துரோ­கங்­க­ளுக்கு மக்­களே முடிவு கட்ட வேண்டும் எனவும் அவர் கோரினார்.

ஆட்சி மாற்­றத்­திற்கு யானை பலம் என்ற தொனிப்­பொ­ருளின் கீழ் நேற்று கொழும்பு ஹைட் பார்க் மைதா­னத்தில் இடம்­பெற்ற வாக்­க­ளிப்பு நிலைய அமைப்­பா­ளர்­க­ளு­ட­னான மாநாட்டின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலை நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களை அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கி­றது. இதன்­போது குறித்த தேர்­த­லி­னூ­டாக ஜனா­தி­பதி மஹிந்த ராஜ பக் ஷவை வெற்றிக் கொள்ளத் தயார்.

கடந்த ஒரு வரு­டத்­துக்கு முன்பு ஐ.தே.க.வினால் ஆட்­சியை கைப்­பற்ற முடி­யாது என்று மக்கள் கூறினர். இதன் கார­ண­மாக எமது கட்­சியை விட்டு பலர் பிரிந்து சென்­றனர். மேலும் சிலர் எம்மை மறந்து விட்­டனர். எனினும் ஒரு சிலரே கட்­சியை இந்த நிலை­மைக்கு கொண்டு வந்­தனர்.

ஊவா தேர்­தலின் முடி­வி­னூ­டாக தற்­போது மக்­க­ளுக்கு நம்­பிக்கை எழுந்­துள்­ளது. இனிமேல் மக்கள் துன்­பப்­பட்­டது போதும் ஊவா தேர்­தலை வெற்றி கொண்­டதை போன்று ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவை தோற்­க­டிப்­ப­தற்­கான யுத்­தத்தை ஆரம்­பிக்க வேண்­டி­யுள்­ளது. வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளி­னூ­டாக இந்த யுத்­தத்­திற்கு தயா­ராக வேண்டும்.

எனவே, குடும்ப ஆட்­சியை ஒழித்து மக்­க­ளாட்­சியை ஸ்தாபிக்க வேண்டும். அதே­போன்று ஜனா­தி­பதி முறை­மையை ஒழித்து 17 ஆவது திருத்த சட்­டத்தை மீள கொண்டு வர­வேண்டும்.

தற்­போது எனது இலண்டன் விஜயம் தொடர்பில் அரசு சில குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி வரு­கி­றது.

எனினும் நாட்டின் உண்­மை­யான துரோகி யார்? வீரர் யார்? என்­ப­தனை மக்கள் தீர்­மா­னிக்க வேண்டும். யுத்­தத்தை முடி­வுக்கு கொண்டு வந்த ஜெனரல் சரத் பொன்­சே­காவின் வாக்­கு­ரி­மையை பறித்து விடு­தலை புலி­களின் தலைவர் பிர­பா­க­ர­னுக்கு பின்பு தலை­வ­ராக இருந்த கே.பி.என்ற குமரன் பத்­ம­நா­த­னுக்கு வாக்­கு­ரிமை வழங்­கப்­பட்­டுள்­ளது. எனவே, இது நாட்­டிற்கு செய்த துரோ­க­மில்­லையா?

அதே­போன்று ஐரோப்­பிய நீதி­மன்றில் புலி­களின் தடை நீக்­கத்­திற்கு எதி­ராக தலை­யி­டாமை துரோ­க­மில்­லையா?

இந்­நி­லையில் நான் அரசிடம் எழுப்பிய நான்கு கேள்விகளுக்கு இதுவரை ஜனாதிபதியோ அரசாங்கமோ பதிலளிக்கவில்லை எனவே இதிலிருந்து யார் துரோகி என்பது புலப்படுகிறது.

எனவே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்தது துரோகங்களில் முதன்மையானது என்றார். 
<வீரகேசரி>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :